செவ்வாய், ஏப்ரல் 29, 2008

தமிழீழ தா(ய)கம்

உணர்வுகளை கொன்றனர்;
உரிமைகளை பறித்தனர்;
உண்மைகளை மறைத்தனர்;

தழிழர் எம்மை ஏனோ வெறுத்தனர் - இத்
தரணியில் எமக்கு இடமில்லை என்றனர்

தாய் என்று அழைத்த பூமி
தகனப் பலி எம்மை கேட்க;

தவித்து நிற்கின்றோம் தனிமரமாய்
தாயகம் எமக்கு கிடைக்கும் என்றோ......?

திங்கள், ஏப்ரல் 21, 2008

என் காதல்............


உன் முகத்தை கூட என்னால் முழுமையக பார்க்க முடிவதில்லை உன் மீதான என் காதலால்;

எங்கோ தூரத்தில் கேட்கும் உன் குரலால் தொலைந்து போகும் என் நிஜங்கள்;

எப்பொழுதும் உன் வருகைக்காக தவமிருக்கும் என்
விழிகள்;

உன் மீதுள்ள அத்தனை காதலையும் பொத்தி வைத்திருக்கிறேன் பொக்கிஷமாய்;
என்றாவது ஒரு நாள் அது உன்னைச் சேரும்
என்ற நம்பிக்கையில்...


வெள்ளி, ஏப்ரல் 18, 2008

பா(ர்)வை மொழி...


தெரியாத மொழிகளில் எல்லாம் கவிதை கேட்டு
புரிந்த என் மனதுக்கு;

ஒரே ஒரு கவிதை மட்டும் இன்னும் புரியவில்லையடி;
அது உன் கண்கள் பேசும் கவிதை.............