செவ்வாய், அக்டோபர் 07, 2008

"வாழ்க்கை வாழ்வதற்கே"


"Life is like a piano,
white keys R happy moments and
Black keys are sad moments
But remember both keys are
Played together to give
Sweet Music in life…………….. "
ஓர் கவிஞரின் அழகான வரிகள் இவை.

வாழ்க்கை என்றால் என்ன?சிலருக்கு அது ஓர் அழகான நீரோடை போன்று இருக்கலாம். சிலருக்கு அது பயங்கரமானதொரு சுனாமியை போன்றும் தோற்றமளிக்கலாம். எனினும் வாழ்க்கையை " இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை, துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை, இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்" என்ற பாடல் வரிகள் நன்றாகவே உணர்த்தி நிற்கின்றனவல்லவா...?

எனவே இன்றிலிருந்தே உங்கள் கவலைகளை மூட்டை கட்டுங்கள், தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், உங்களது அழுகை கண்ணீரை துடைத்தெறியுங்கள் வாழ்க்கையை வளமாக வாழ வழி வகுங்கள் ஏனெனில் "வாழ்க்கை வாழ்வதற்கே"

இதோ!............ இதை நான் ஒரு இந்து சமய புத்தகம் ஒன்றின் பின் அட்டை பகுதியிலிருந்து எடுத்தேன், இதை எழுதியவரின் பெயர் அதில் போடப்படவில்லை, எனினும் இந்த வைர வரிகளை நீங்களும் படித்து உங்கள் வாழ்க்கையில் பயனடைய வேண்டும் என்றதொரு நல்நோக்கில் இதை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...


1.மிக மிக நல்ல நாள் - இன்று
2.மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு
3.மிகவும் வேண்டாதது - வெறுப்பு
4.மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
5.மிகக் கொடிய நோய் - பேராசை
6.மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
7. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
8. ந‌ம்பக் கூடாதது - வதந்தி
9. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
10. செய்யக் கூடாதது - உபதேசம்
11.உய‌ர்வுக்கு வழி - உழைப்பு
12. நழுவ‌ விடக் கூடாதது - வாய்ப்பு

நன்றி.


திங்கள், அக்டோபர் 06, 2008

யாமறியோம் பராபரமே!



யார் துடைப்பார் இத் துயரை
எவ்வழி காண்போம் நம் உறவை
காணாமற் போதல் கதையாகிப் போன
எம் தேசத்தில்
எத்தனை வழிகளில் முயன்றோம்
அத்தனையும் பொய்யெனவே ஆயினவே,

மனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -
இருந்தும்
மனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்

விடிய விடிய காத்திருந்தும்
விடியவில்லையே எம் பொழுது

ஒரு தாயின் விசும்பல்
ஒரு தாரத்தின் கதறல்
ஒரு குழந்தையின் கண்ணீர்
ம்........யாருக்கு அது வேண்டும் இப்
யு(பு)த்த பூமியில் ???

ஏன் எதற்கு என்ற கேள்வியில்லை
நாம் கேட்டால் அது நன்றும் இல்லை
யார் புரிவார் இச் செயலை
யாமறியோம் பராபரமே!