சனி, ஜூன் 07, 2008

ஏனோ.................?


65610 சதுர km பரப்பளவே கொண்ட அழகிய
குட்டித் தீவு நீ,
இந்து சமுத்திரத்தின் நித்திலம் நீ,
இயற்கை துறைமுகத்தால் புகழ் பெற்று விளங்கும்,
கேந்திர மத்திய நிலையமும் நீ.

ஆசியாவிலேயே எழுத்தறிவு வீதத்தில் உனக்கு
தனிச்சிறப்பு,
உலகிலேயே கண்தானம் செய்வதிலும் உனக்கு
முதற்சிறப்பு.

காசியப்பன் ஆண்ட பூமி நீ,
கருணை நிறை புத்த மதம் உன் தார்மீகம்.

விபுலானந்த அடிகள் பிறந்ததும் இங்கே தான்,
அன்பு நிறை யோசவ்வாஸ் மாமுனி மறை
பரப்பியதும் உன்னில் தான்.
கிரிக்கெட்டில் புகழ் உனக்கு,
பெரும் தோட்ட தேயிலை பயிர்ச் செய்கை
பலம் உனக்கு.


மாணிக்க கல் விளையும் பூமி நீ,
மலை வளங்களும் உன்னில் பிரமாதம்.

இவை எல்லாம் கொண்டு சிறப்புற்று
விளங்கும் நீ,,,

கொலைகளும் தற்கொலைகளும் மலிந்த,
இரத்த ஆறு கரைபுரண்டோடும்
ஓர் யுத்த பூமியாகவே எல்லோராலும்
அறியப்படுகின்றாயே அது ஏனோ........?