திங்கள், அக்டோபர் 06, 2008

யாமறியோம் பராபரமே!



யார் துடைப்பார் இத் துயரை
எவ்வழி காண்போம் நம் உறவை
காணாமற் போதல் கதையாகிப் போன
எம் தேசத்தில்
எத்தனை வழிகளில் முயன்றோம்
அத்தனையும் பொய்யெனவே ஆயினவே,

மனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -
இருந்தும்
மனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்

விடிய விடிய காத்திருந்தும்
விடியவில்லையே எம் பொழுது

ஒரு தாயின் விசும்பல்
ஒரு தாரத்தின் கதறல்
ஒரு குழந்தையின் கண்ணீர்
ம்........யாருக்கு அது வேண்டும் இப்
யு(பு)த்த பூமியில் ???

ஏன் எதற்கு என்ற கேள்வியில்லை
நாம் கேட்டால் அது நன்றும் இல்லை
யார் புரிவார் இச் செயலை
யாமறியோம் பராபரமே!