ஞாயிறு, அக்டோபர் 11, 2009

பறக்க எனக்கும் ஆசைதான்!












பறக்க எனக்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!



எம்பிக் குதித்து வானத்தில் பற்ந்து
வட்ட மிட்டு வலம் வந்து
பின் தரையை நோக்கி விழுந்து
மரக்கிளைகளில் தாவி அங்கும் இங்கும் ஓடி
அலைந்து மழையில் நனைந்து
கும்மாளம் அடித்து குதூகலித்து
பின் மீண்டும் பறக்க எனக்கும ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



என் நண்பர்கள் போல் இரைதேடி அலைந்து
களைப்புற்று கூடு திரும்பி
என் மனைவி மக்களுடன் உண்டு குடித்து மகிழ்ந்து
அவர்கள் உண்பதை ரசித்து; க‌ர்வ‌ப்ப‌ட்டு
பின் ப‌றந்து மாலை வேளை உணவு தேடி
மீண்டும் மீண்டும் க‌ளைப்புற்று ,என்
கூடு திரும்ப‌ என‌க்கும் ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!


இவ் விண்வெளி எங்கும் ப‌ற‌ந்து
க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாண்டி
அளாவ‌ளாவி சிலிர்ப்புற்று,
ம‌லை மேடு முகில் தாண்டி
ச‌ம‌த‌ரைக‌ள் எங்கும் ப‌ற‌ந்து திரிந்து
இய‌ற்கையை ர‌சித்து இன்ப‌த்தில் திழைத்து
இதமாய் பொழுது போக்க என‌க்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



இவ் வீட்டின் எஜமான் என்னை வாங்கி வந்தார் ஆசையாய்
தன்னாசை மகள் கேட்டதற்காய், ஆனால்
அவ‌ரோ அறிந்திருக்க‌வில்லை என்னாசை
ப‌ற‌க்கும் ஆசை என‌. ஏனெனில்;
நானோ கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!




தாய் சொன்னார் போதும் இச் சிறு கூடு என‌
ம‌க‌ள் சொன்னார் இல்லை இன்னும் பெரிதாய் வேண்டும்
என் குருவி சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ என
எது என் சுத‌ந்திர‌ம்???..... தெரியாத‌
இவ் வேடிக்கை ம‌னித‌ர்க‌ளுக்காக‌
வேடிக்கை பொருளாகிவிட்ட‌ நானோ;
கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!