வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

இப்படிக்கு நாங்கள்!






பசிக்குது ஏனக்கு
பசியாற எதுவுமில்லை


பச்சத் தண்ணி குடிச்சதால
பல நோய்கள் வந்து போய்று

பாடப் புத்தகம் தூக்கினாலோ
பள்ளி ஞாபகங்கள் கண்ணை நனைக்குது

பனை ஓலை கிடுகு வடலி
பம்பரம் ஊஞ்சலாட்டம் கிளித்தட்டு

பசுமையான நினைவுகள் யாவும்
பாழாய் போய் நாட்கள் ஆயிட்டு;

பசிக்குது எனக்கு இப்ப‌
பசியாற எதுவும் இல்லை

பச்சை மரத்தடி வகுப்பறை
பாடங்கள் இங்கு நடக்குதிங்கு

பார்ப்பவை நினைப்பினம் எம் வாழ்வு
பரவாயில்லை ஏதோ போகுதென்று

படும் கஷ்டம் நாங்கள் அன்றோ
பார்ப்பவர் உமக்கா விளங்க போகுது?



பழைய‌‌ எம் இழ‌ந்த‌ வாழ்வை
பரிதவிக்கும் எமக்கு மீட்டுத் த‌ர இய‌லும‌ன்றோ...?



இப்ப‌டிக்கு நாங்க‌ள்,

பரித‌விக்க‌ விட‌ப்ப‌ட்ட‌ ஈழ‌ ம‌க்க‌ள்!

சனி, ஆகஸ்ட் 08, 2009

அக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!







சொந்த நாட்டில் அகதிகள் நாம்
சொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்


பட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்
பகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்


சுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு
சுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்


அப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா?
ஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்?


வெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்

நினைச்சுப் பாருங்க

வேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்

தான்!