வெள்ளி, பிப்ரவரி 27, 2009

இனியும் வேண்டாமே! (கண்ணீர் துளிகளுடன்)




நேற்று முத்துகுமார்
இன்று அமரேசன்
நாளை ??????


இனியும் வேண்டாமே
இன்னொரு தீக்குளிப்பு
இதயம் தாங்கவில்லை
இடிந்த உம் வாழ்வு கேட்டு

துஷ்டர் நிறை இவ்வுலகில்
துன்பமான செய்தி கேட்டு
துறக்க நினைக்கும் உம் உயிரை
தூசாக தான் நினைத்தனரே

கஷ்டப்பட்டு கதறி அழும்
உம் குடும்பம் காண்பீரோ
கருனைப் பட்டு எங்கள் மேல்
உயிர் துறக்க துணிந்தீரோ

இஷ்டப்பட்டு உம் சாவை
ஏற்கவில்லை எம் மனங்கள்
நஷ்டப்பட்டு நிற்பதெனவோ
எம் தமிழ் இனம் தான் பாரீரோ

போர்களமாம் ரணகளத்தில்
பொஸ்பரஸ் குண்டு எமை அழிக்க‌
போதும் இவ் யுத்தம் என்று
உம் சாவை நீர் அணைக்க‌


கண்ணீர் தான் மிஞ்சிடுமோ
கவலை தான் எஞ்சிடுமோ
வேண்டாமே இனி எமக்கு
இரு புறமும் உயிரிழப்பு!

புதன், பிப்ரவரி 25, 2009

எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!


ஒஸ்காரின் நாயகனே
சாதனையின் காவியனே
உலகமெங்கும் உன் பெயர்
உவகையுடன் உதிர்த்து விட‌
களிப்புடனே நாம் கூறுகிறோம்
Congratulation!



இசையாய் வாழ்பவனே
இமையமாய் உயர்பவனே

விண்ணெல்லாம் உன் புகழ்
விடிவெள்ளியாய் ஒளி பரப்ப‌
பெருமையுடன் நாம் கூறிடுவோம்
Best Wishes!




தென் இந்தியாவில் மலர்ந்தவனே
தேனமுதாய் பொழிபவனே
இதயமெங்கும் உன் இசை
இன்பமாய் இடி முழங்க
கீதமுடன் நாம் கூறிடலாம்
Greetings For You!




உன் அன்னை உளம் மகிழ‌
உறவெல்லாம் உடன் சிறக்க‌
நெஞ்சமெல்லாம் உன் உருவம்
நெடிது காலம் நிலை பெறவே
கொண்டாடி மகிழ்ந்து நாம் கூறுகின்றோம்
God Bless You!


வெள்ளி, பிப்ரவரி 20, 2009

எனக்கான நீ...


எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்
பத்திரமாய்
என் நினைவலைகளில் தினம் தினம் என்னுடனே...


என் சின்ன சின்ன சந்தோஷங்களின் பொழுதும்,
என் பெரிய சோகங்களின் பொழுதும்,
என் செல்லக் குறும்புகளின் பொழுதும்,
எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்

பத்திரமாய்


அதிகாலை வேளைகளில் நான் உன் பெயரை
உச்சரிக்கும் பொழுதும்
அந்தி மாலை நேர‌ங்க‌ளில் என் உறக்கக்
கனவுகளின் போதும்
என‌க்கான‌ நீ இன்னமும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்


என் வாழ்க்கையின் ஒவ்வொரு த‌ருண‌ங்க‌ளின்
பொழுதும்
என் வீட்டிற்குள் நான் வாச‌ம் செய்யும் என்
அலுவல்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்

நொடுஞ்சாலை வீதிக‌ளில் நான் ந‌ட‌ந்து செல்லும்
பொழுதும்
நீண்ட‌ தூர‌ என் பிரயாணங்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்

பத்திர‌மாய்

என் ஒவ்வொரு நொடிப்பொழுது த‌னினும்
எனக்கான நீ என்னுடனே என் நினைவலைகளில்...
என்றென்றும் என் மனக்கூட்டிற்க்குள் இன்னமும்
பத்திரமாய்
உன‌க்கான‌ நான் உன் இத‌ய‌ வாச‌ல் த‌னிலும்
இல்லாத‌ போதும்...

புதன், பிப்ரவரி 18, 2009

ச்ச்சீசீதனம்...


பொன் வேண்டும்,
பொருள் வேண்டும் என்பர்,
பெண் பாவை தாம் எமை வரன் கேட்பார்...

சீர் வேண்டும்,
சொத்து வேண்டும் என்பர்,
சிறப்புடனே நாம் வாழ்ந்திடவே என்பர்...

கார் வேண்டும்,
கனக்க வேண்டும் என்பர்,
கண்மணியே உனை கருத்தோடு காத்திடுவேன்
என்பர்...

ஆனாலும் எம்ம‌வ‌ரே...

பொன் வேண்டாம்
பொருள் வேண்டாம்

சீர் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்

கார் வேண்டாம்
கன‌க்க‌வும் வேண்டாம்

உம‌த‌ன்பு ஒன்றே போதுமே எமக்கு,
உயிரென‌ நாம் உம‌க்காய் வாழ்ந்திட‌வே...

புதன், பிப்ரவரி 11, 2009

என்ன‌ நான் சொல்லுற‌து...?


ஒண்டும் விளங்குதில்ல...?
எங்கட பாழாய் போன லங்கா தேசத்தில;
என்ன நான் சொல்லுறது;
எல்லாம் எங்கட "வற்"றிட வளர்ச்சி பற்றித்
தானுங்கோ...

ஒருக்கா கூடுமென்பர்,
ஒருக்கா குறையுமென்பர்,
ஆனா ஒண்டையுமே காணம்...?
எங்கட பொருட்கள்ட விலையேற்றம் தவிர,


முதல்ல 15% ம்,,,
பிற‌கு 13% ம்,,,
இப்ப 12% ம்,,,
ஆனா என்னண்ட‌ என‌க்குப் பார்த்தா,
இப்ப‌ ஏதோ 16% மாதிரிக் கிட‌க்கு
அப்ப‌டி இருக்கு சந்தைல‌ சாமான்ட‌
விலையெல்லாம்.

கேட்டா ஏதோ Nation Building Tax ஆம்...?
ஓமோம் ஓமோம் ந‌ல்ல‌ ப‌க‌டிதான் பாருங்க‌;
இங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation People Distroyed
அங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation Build Up ந‌ட‌க்குது
போல‌,

யாருக்கு தான் விள‌ங்குமோ;
எங்க‌ட‌ பெரிய‌ ம‌னுச‌ன் ம‌ஹிந்த‌வின்
சிந்த‌னைக‌ள்...?

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

கேட்கவில்லையோ எம் குரல்.....?


சர்வதேச சமூகமே...,
ஏனிந்த மொளனம்...?
ஏனிந்த பாராமுகம்...?
கேட்கவில்லையோ எம் குரல்...?
காணவில்லையோ நம் மக்களின்
படுகொலைகளை ...?

தீக்குளித்தோம்,
உண்ணா நோன்பிருந்தோம்,
மனித சங்கிலியாய் களம் கண்டோம்,
ஆனாலும் பயனில்லையோ...?
அது உம் செவி தனில் படவில்லையோ...?


தந்தி வழி மனுக்கொடுத்தோம்,
தகவல்கள் பலவும் தந்தோம்,
த‌ர‌ணியெங்கும் தமிழர்கள் நாம் த‌யை கேட்டோம்,
ஆனாலும் த‌ய‌க்க‌மேன் உம‌க்கு...?
த‌ட‌ய‌ங்க‌ள் உறைக்க‌வில்லையோ உமதண்டை...?


கால‌ம் தாழ்த்தி ப‌தில் சொல்லிய‌,
க‌றை ப‌டிந்த‌ வ‌ர‌லாறு உம‌க்கு வேண்டாம்...
க‌ல‌ங்கி நிற்கும் எம் ம‌க்க‌ளின்
க‌த‌ற‌ல்க‌ளை க‌ண் பாரும்.


ஏனெனில்; நாளை ந‌ம் ச‌மூக‌த்தின்
க‌ல்ல‌றைக‌ளில் உம் பெய‌ரும் சாப‌மாய்
ஒலிக்குமுன்........

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

உங்க‌ளோடு தான் நாமும்...


தினம் தினம் உங்கள் இன்னல்கள் கண்டு
நாங்களும் அழுகின்றோம்;
எங்கள் அகக் கண்களில் என்நேரமும் நீங்கள்
எங்களோடு தான்,

உங்கள் சோகங்கள்,
உங்கள் கதறல்கள்,
உங்கள் காயங்கள்,
உங்கள் வலிகள்,

ஐயகோ!.....எங்களுக்கு கேட்காமலில்லை,,,,

உங்கள் உடற் புண்கள்;
எங்கள் மனப் புண்கள்.


உங்களின் குமுறல்கள்;
எங்களின் இதயத்துடிப்பு.


உங்களின் வேதனை;
எங்களின் பெருமூச்சு.

யாருக்கில்லை கவலை உங்கள் இன் நிலை
கண்டு.....,,?
யாருக்கில்லை கோபம் தமிழன் தான் படும் துயர்
க‌ண்டு...,,,,,?

உட‌லால் தொலைவாகிப் போனாலும்...
உற‌வால் நானும் நீயும் ஒரு தாய்
பிள்ளைக‌ள‌ன்றோ.....?

நீங்க‌ள் தான் எங்க‌ள் உண‌ர்வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் உற‌வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் பாசம்,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் நேச‌ம் அன்றோ.....,,, ?


ஆனாலும்,,,
நீங்க‌ள் உங்க‌ள் உட‌லால் ம‌ரிக்கிறீர்க‌ள்,,,
நாங்க‌ள்......?????
உங்க‌ள் உணர்வுக‌ளால் மரிக்கின்றோம் தின‌ம்
தின‌ம்.....