சனி, நவம்பர் 21, 2009

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!






இமைகள் தாழ்ந்தன‌
விழிகள் அழுதன
என் முக‌ம் நோக்காத‌ உன் பார்வையினால்!







என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!










க‌ண் நிறைய‌க் காத‌ல்
ம‌ன‌ம் நிறைய‌ நேச‌ம்
நீ இல்லாத‌ தேச‌மோ நான் என்றுமே வாழ‌ விரும்பாத‌ என்

வாச‌ம்!








என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!





அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட‌
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்ப‌ங்க‌ள்!







க‌ண்க‌ளிலோ வெட்க‌ம்
முக‌த்திலோ காத‌ல்
இத‌ய‌ம் முழுவ‌துமோ நீ!






கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!





எல்லோர் க‌ண்க‌ளிலும் பெரிய‌வ‌னாய் தெரியும் நீ
என் க‌ண்க‌ளில் மட்டும் ஏன‌டா சிறு குழ‌ந்தையாய் ம‌ட்டுமே
தெரிகிறாய்?





உன் மீது நான் கொண்ட‌ காதலை
யாரிட‌மும் சொல்லாதே என்று என்‍
ந‌ண்பியிட‌ம் சொல்ல‌த் தெரிந்த‌ என‌க்கு
என் க‌ண்க‌ளிட‌ம் சொல்ல‌த் தெரிய‌வில்லையே
பார் எப்ப‌டி காட்டிக் கொடுத்து விடுகின்ற‌ன‌ ந‌ம் காத‌லை!





உன் பார்வை அம்புக‌ளால் நீ என்னை கொலை செய்யும்


போதெல்லாம்;


என் இத‌ய‌ம் புதுப் பிற‌ப்பு அடைகின்றதே தோழி!









காத‌லிடம் இருந்து தான் பிற‌ந்து கொண்ட‌தா வெட்க‌ம்?

உன் மேல் நான் காத‌ல் கொண்ட‌தும்

என் க‌ண்க‌ள் வெட்க‌ப் பூக்க‌ளை அணிந்து கொண்ட‌ன‌வே!





என்றுமே விடுதலையாக‌ விரும்ப‌வில்லை

உன் விழிச்சிறையில் அக‌ப்பட்டுக் கொண்ட பின்ன‌ர்!




காற்றிட‌ம் இருந்து கூட‌ த‌ப்பி விட‌லாம் நீ
ஆனால் என் க‌ண் அசைவிலிருந்து த‌ப்ப‌ முடியாத‌ ப‌டிக்கு என்

காத‌ல்!







நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!