என் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...
திங்கள், ஜூலை 26, 2010
செவ்வாய், டிசம்பர் 29, 2009
தவிப்பு!
தொடர்ந்து ஜெயிக்கும் இவ் வுலகில்
கடவுளையும் உண்மையையும்
தேடித் தேடியே களைத்துப் போனான்
அப்பாவி நியாயஸ்தன்!
வியாழன், டிசம்பர் 24, 2009
வாரம் ஒரு ஹைக்கூ!
டிசம்பர் 25
குடும்பத்தில் அடுக்கடுக்காய்
குழந்தைகள் இறந்து போயின
சுனாமியின் கோரம்;
இத்தனை வருடங்கள் கழிந்தும்
கிறிஸ்துமஸ் கொண்டாடுவதா இல்லையா?
கிறீஸ்தவ குடும்பத்தில்
இன்னமும் திண்டாட்டம்!
புதன், டிசம்பர் 16, 2009
வாரம் ஒரு ஹைக்கூ!
நிரந்தர முகவரி;
விண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்
வலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்
மனம்!
செவ்வாய், டிசம்பர் 15, 2009
இவர்களுக்கான நமது பதில் தான் என்ன?
எங்கே நாம்?
எனக்கு தெரியவில்லை சத்தியமாய்
எம்மை போன்று சிறுவர்கள் தாம் இவர்களும்
ஆனால் வாழ்வியலோ வேறு
காலில் ஆணி குத்தி விட்டதோ
அலறி அடிக்கின்றோம் ஐயோ அம்மா!
கையில் கறண்ட் அடித்து விட்டதோ
பதறித் துடிக்கின்றோம் சில நிமிடங்கள் தனும்
ஆனால் இங்கோ,
வாழ்க்கையே முள்ளுக் கம்பிகளாய் இவர்களுக்கு!
துள்ளித் திரிய வேண்டிய வயதில்
கையில் பிச்சைப் பாத்திரம்
அன்றாட உணவுக்கோ
அனுதினமும் அல்லல் படும் நிலை
TV யில் அருவருப்பான ஒரு காட்சியா?
அருவருக்கிறது எங்களுக்கு உணவும் சேர்ந்து
அன்றாட உணவு அதிகமாகி விட்டதா?
திறந்து கிடக்கிறது குப்பைத் தொட்டி
அப்பொழுதெல்லாம் இவர்கள் எமக்கு தூரமாகிப் போய்விடுகிறார்களா???
வேற்றுமை கூடாது தான்
ஆனால் எனக்கு சத்தியமாய் புரியவில்லை!
கடவுளே எங்களிடத்தில் வேற்றுமை பாராட்டுகிறாரா என்ன?
ஏன் இவர்களை வேற்றுமையாய் படைத்து விட்டார்?
ஒரு நிமிடம் இவர்களுக்காக சிந்திப்போமா?
சனி, நவம்பர் 21, 2009
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

இமைகள் தாழ்ந்தன
விழிகள் அழுதன
என் முகம் நோக்காத உன் பார்வையினால்!
என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!

கண் நிறையக் காதல்
மனம் நிறைய நேசம்
நீ இல்லாத தேசமோ நான் என்றுமே வாழ விரும்பாத என்
வாசம்!
என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!

அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்பங்கள்!

கண்களிலோ வெட்கம்
முகத்திலோ காதல்
இதயம் முழுவதுமோ நீ!

கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!

எல்லோர் கண்களிலும் பெரியவனாய் தெரியும் நீ
என் கண்களில் மட்டும் ஏனடா சிறு குழந்தையாய் மட்டுமே

உன் மீது நான் கொண்ட காதலை
யாரிடமும் சொல்லாதே என்று என்
நண்பியிடம் சொல்லத் தெரிந்த எனக்கு
என் கண்களிடம் சொல்லத் தெரியவில்லையே
பார் எப்படி காட்டிக் கொடுத்து விடுகின்றன நம் காதலை!

உன் பார்வை அம்புகளால் நீ என்னை கொலை செய்யும்
போதெல்லாம்;
என் இதயம் புதுப் பிறப்பு அடைகின்றதே தோழி!
காதலிடம் இருந்து தான் பிறந்து கொண்டதா வெட்கம்?
உன் மேல் நான் காதல் கொண்டதும்
என் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே!

என்றுமே விடுதலையாக விரும்பவில்லை
உன் விழிச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட பின்னர்!
காற்றிடம் இருந்து கூட தப்பி விடலாம் நீ
ஆனால் என் கண் அசைவிலிருந்து தப்ப முடியாத படிக்கு என்
காதல்!

நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!










