வெள்ளி, பிப்ரவரி 06, 2009

உங்க‌ளோடு தான் நாமும்...


தினம் தினம் உங்கள் இன்னல்கள் கண்டு
நாங்களும் அழுகின்றோம்;
எங்கள் அகக் கண்களில் என்நேரமும் நீங்கள்
எங்களோடு தான்,

உங்கள் சோகங்கள்,
உங்கள் கதறல்கள்,
உங்கள் காயங்கள்,
உங்கள் வலிகள்,

ஐயகோ!.....எங்களுக்கு கேட்காமலில்லை,,,,

உங்கள் உடற் புண்கள்;
எங்கள் மனப் புண்கள்.


உங்களின் குமுறல்கள்;
எங்களின் இதயத்துடிப்பு.


உங்களின் வேதனை;
எங்களின் பெருமூச்சு.

யாருக்கில்லை கவலை உங்கள் இன் நிலை
கண்டு.....,,?
யாருக்கில்லை கோபம் தமிழன் தான் படும் துயர்
க‌ண்டு...,,,,,?

உட‌லால் தொலைவாகிப் போனாலும்...
உற‌வால் நானும் நீயும் ஒரு தாய்
பிள்ளைக‌ள‌ன்றோ.....?

நீங்க‌ள் தான் எங்க‌ள் உண‌ர்வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் உற‌வு,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் பாசம்,,,
நீங்க‌ள் தான் எங்க‌ள் நேச‌ம் அன்றோ.....,,, ?


ஆனாலும்,,,
நீங்க‌ள் உங்க‌ள் உட‌லால் ம‌ரிக்கிறீர்க‌ள்,,,
நாங்க‌ள்......?????
உங்க‌ள் உணர்வுக‌ளால் மரிக்கின்றோம் தின‌ம்
தின‌ம்.....