புதன், பிப்ரவரி 18, 2009

ச்ச்சீசீதனம்...


பொன் வேண்டும்,
பொருள் வேண்டும் என்பர்,
பெண் பாவை தாம் எமை வரன் கேட்பார்...

சீர் வேண்டும்,
சொத்து வேண்டும் என்பர்,
சிறப்புடனே நாம் வாழ்ந்திடவே என்பர்...

கார் வேண்டும்,
கனக்க வேண்டும் என்பர்,
கண்மணியே உனை கருத்தோடு காத்திடுவேன்
என்பர்...

ஆனாலும் எம்ம‌வ‌ரே...

பொன் வேண்டாம்
பொருள் வேண்டாம்

சீர் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்

கார் வேண்டாம்
கன‌க்க‌வும் வேண்டாம்

உம‌த‌ன்பு ஒன்றே போதுமே எமக்கு,
உயிரென‌ நாம் உம‌க்காய் வாழ்ந்திட‌வே...