வெள்ளி, பிப்ரவரி 27, 2009

இனியும் வேண்டாமே! (கண்ணீர் துளிகளுடன்)




நேற்று முத்துகுமார்
இன்று அமரேசன்
நாளை ??????


இனியும் வேண்டாமே
இன்னொரு தீக்குளிப்பு
இதயம் தாங்கவில்லை
இடிந்த உம் வாழ்வு கேட்டு

துஷ்டர் நிறை இவ்வுலகில்
துன்பமான செய்தி கேட்டு
துறக்க நினைக்கும் உம் உயிரை
தூசாக தான் நினைத்தனரே

கஷ்டப்பட்டு கதறி அழும்
உம் குடும்பம் காண்பீரோ
கருனைப் பட்டு எங்கள் மேல்
உயிர் துறக்க துணிந்தீரோ

இஷ்டப்பட்டு உம் சாவை
ஏற்கவில்லை எம் மனங்கள்
நஷ்டப்பட்டு நிற்பதெனவோ
எம் தமிழ் இனம் தான் பாரீரோ

போர்களமாம் ரணகளத்தில்
பொஸ்பரஸ் குண்டு எமை அழிக்க‌
போதும் இவ் யுத்தம் என்று
உம் சாவை நீர் அணைக்க‌


கண்ணீர் தான் மிஞ்சிடுமோ
கவலை தான் எஞ்சிடுமோ
வேண்டாமே இனி எமக்கு
இரு புறமும் உயிரிழப்பு!