ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

கேட்கவில்லையோ எம் குரல்.....?


சர்வதேச சமூகமே...,
ஏனிந்த மொளனம்...?
ஏனிந்த பாராமுகம்...?
கேட்கவில்லையோ எம் குரல்...?
காணவில்லையோ நம் மக்களின்
படுகொலைகளை ...?

தீக்குளித்தோம்,
உண்ணா நோன்பிருந்தோம்,
மனித சங்கிலியாய் களம் கண்டோம்,
ஆனாலும் பயனில்லையோ...?
அது உம் செவி தனில் படவில்லையோ...?


தந்தி வழி மனுக்கொடுத்தோம்,
தகவல்கள் பலவும் தந்தோம்,
த‌ர‌ணியெங்கும் தமிழர்கள் நாம் த‌யை கேட்டோம்,
ஆனாலும் த‌ய‌க்க‌மேன் உம‌க்கு...?
த‌ட‌ய‌ங்க‌ள் உறைக்க‌வில்லையோ உமதண்டை...?


கால‌ம் தாழ்த்தி ப‌தில் சொல்லிய‌,
க‌றை ப‌டிந்த‌ வ‌ர‌லாறு உம‌க்கு வேண்டாம்...
க‌ல‌ங்கி நிற்கும் எம் ம‌க்க‌ளின்
க‌த‌ற‌ல்க‌ளை க‌ண் பாரும்.


ஏனெனில்; நாளை ந‌ம் ச‌மூக‌த்தின்
க‌ல்ல‌றைக‌ளில் உம் பெய‌ரும் சாப‌மாய்
ஒலிக்குமுன்........