திங்கள், மார்ச் 09, 2009

சின்ன‌ப் பூவே மெல்ல‌ப் பேசு...(பாக‌ம் 02)


தாரணியின் பயத்தை கண்டு அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவன் அப்பாவியான அப்பெண்னை நோக்கி "பயப்படாதீங்க தாரணி, எங்கட அப்பாக்கு ஒன்டும் இல்ல. நீங்க பயப்பட்டு கொண்டிருப்பீங்க எண்டு தான் அப்பா உங்களட்ட சொல்லீற்று வரச் சொன்னார். "அப்ப‌ ச‌ரி நான் வாற‌ன் என்ன‌"என்று கூறிவிட்டு விடை பெற்றான்.

ஆனால் அன்றைய தினமோ அவன் கண்கள் தான் விடை பெற்றது, மனம் என்னமோ தாரணியிடம் தான் சிக்கிக் கொண்டது. அன்று ஆரம்பமான அவர்களின் முதல் சந்திப்பு அவர்களை நண்பர்களாக்கியது. அன்றிலிருந்து தாரணிக்கு பல வகைகளிலும் உதவி புரியலானான் குமரன். தாரணி தனது பாடம் சம்மந்தமான அனைத்து விளக்கங்களையும் குமரனிடம் கேட்டு புரிந்து கொண்டாள். அவர்களிடைய அத்தகைய நட்பு காலப் போக்கில் காதலாகவும் உருவெடுத்தது. ஆனால் அவர்கள் அச் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களாக இருந்த படியால் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படிப்பு முடியட்டும் என்று குமரனும், குமரனே முதலில் சொல்லட்டும் என்று தாரணியும் இருந்து விட்டனர். ஆனால் அவ் இருவரினது நட்பும் அவர்களை இணைபிரியா நண்பர்கள் என கூற வைத்தது. இவ்வாறு இருக்கையில் தாரணி க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளை பெற்று தான் விரும்பிய படியே விஞ்ஞான பிரிவுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

நாட்கள் நகரலாயின குமரன் தனது வணிகவியல் கற்கை நெறியில் கிளிநொச்சி மாவாட்டத்திலேயே அதி கூடிய புள்ளிகளை பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டான். ஊரே அவனை கொண்டாடியது. தாரணியின் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமா...? இதேவேளை கும‌ர‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்ல‌ வேண்டிய‌ நாளும் வ‌ந்த‌து. கும‌ர‌னுக்கு யாழ்ப்பாண‌ ப‌ல்ல‌க‌லைக் க‌ழ‌க‌ம் கிடைக்க‌ப் பெற்றிருந்த‌து. இருவ‌ருக்கும் பிரிய‌ வேண்டிய‌ சூழ்நிலை, ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்வ‌த‌ற்கு முத‌ல் நாள் கும‌ர‌ன் த‌ன் காத‌லை வெளிப்ப‌டுத்தினான். கண்களில் கண்ணீர் பெருக‌ஆன‌ந்த‌மாக‌ த‌ன‌க்கும் அவ‌னை மிகவும் பிடித்திருப்ப‌தாக‌ கூறினாள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த‌ அவ‌ன் தார‌ணியிட‌ம் எத‌ற்கும் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம் தான் நிட்ச‌ய‌மாக‌ அவ‌ளின் க‌ர‌ம் ப‌ற்றுவேன் என‌ உறுதிமொழி அளித்து விட்டு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் புற‌ப்ப‌ட‌லானான்.


யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் முற்றும் வித்தியாசமான சூழ்நிலை படிப்புடன் பகடிகள் பல இருந்த போதிலும் அவன் தாரணியின் நினைவுகளில் இருந்து விடுபடவேயில்லை. இவனது காதல் மடல் அவளது அன்புக் கரம் நோக்கி தவழ்ந்து கொண்டுதானிருந்தது.


இதேவேளை தாரணியும் க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபேறுகளை எழுதி முடித்திருந்தாள். ஆனால் அவள் விரும்பிய வைத்திய தொழிலுக்குரிய பெறுபேறுகள் கிடைக்காததால் பெருத்ததொரு ஏமாற்றமே அவளுக்கு பரிசாக கிடைத்தது. ஆனாலும் அவள் மனம் சோர்ந்து போய்விடவில்லை. தனது பெற்றோரினது சம்மதத்துடன் தாதியர் பயிற்ச்சி நெறிக்கு விண்ணப்ப படிவம் அனுப்பினாள். அவளது அதிஷ்டம் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்ச்சி கல்லூரிக்கு அவள் தெரிவு செய்யப்பட்டாள். தனயன் யாழ்ப்பாணத்தில் இருப்பதினால் பெற்றோரினது சம்மதமும் கிடைத்து விட எல்லாவற்றிற்கு மேலாக குமரனும் யாழ் பல்கலைகழகத்திலேயே பயின்று வருவதினாலும் தாரணி யாழ் செல்லும் நாளை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினாள்.



அவள் எதிர் பார்த்த அந்த பொன்னான நன் நாளும் வந்து சேர்ந்தது. அவளும் யாழ் நகரை வந்தடைந்தாள். அவளுக்கு தனது பயிற்ச்சிக் கல்லூரியிலே இடம் கிடைத்துவிட அங்கேயே தங்கி தனது படிப்பை தொடரலானாள். பயிற்ச்சிக் கல்லூரியில் நிறைய தோழியரும் அறிமுகமாயினர். இயல்பிலேயே இரக்க சுபாவம் நிறைந்த தாரணிக்கு தாதியர் வேலையும் வெகுவாக பிடித்துவிட நாட்கள் ஆனந்தமாகவே நகரலாயின. இடைஇடையே குமரனிடமிருந்து வரும் பதில்களும் மகிழ்ச்சி தருவனவாகவே அமைந்தன.



நாட்கள் நகர்ந்தன, மாதங்கள் வருடங்களாகியது. கிளிநொச்சியில் குடும்பத்தில் ஒரு பிள்ளை கட்டாயமாக விடுதலைப் புலிகளில் சேர வேண்டிய ஒரு சூழ்நிலை. குமரனின் குடும்பமும் இதற்கு விதிவிலக்காகவில்லை. குமரனின் 2வது தம்பியும் கட்டாயத்தின் நிமித்தம் விடுதலை புலிகளின் உறுப்பினனான். குமரனின் தந்தை எவ்வளவு கெஞ்சியும் அதற்கு பலனிருக்கவில்லை. "உங்களின் அடுத்த சந்ததி நலமாக வாழவேண்டுமெனில் இந்த சந்ததியில் ஒருவரை தியாகம் செய்யுங்கள்" என்பதே அவர்களது பதிலாக இருந்தது. அப்போது குமரனுக்கு இறுதியாண்டு. தனது எதிர்காலம் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் ஆயிரம் ஆயிரம் ஆசைக் கணவுகள் கண்டு கொண்டிருந்தவனுக்கும் இச் செய்தி பேரிடியாகவே இருந்தது. தன் துயரங்களை மறைக்க முயன்றவன் முடியாது வாய் விட்டு கதறி அழுதான்.



ஒருவாறாக‌ த‌ன‌து ப‌ல்க‌லைக‌ழ‌க‌ ப‌டிப்பை நிறைவு செய்தவன், கிளிநொச்சிக்கு ஓடினான். அங்கு வேற‌றுந்த‌ ம‌ர‌ம் போல் திர‌ணிய‌ற்ற முகங்களுடன் க‌ண்ணீர் சிந்தி வ‌ர‌வ‌ழைத்த‌ அவ‌ன‌து பெற்றோரை காண்கையில் அவ‌ன‌து ம‌ன‌மும் ஊமையாய் அழுத‌து. அந்த‌ ஒரு நொடிப் பொழுதில் முடிவெடுத்தான் கும‌ர‌ன். த‌ன் த‌ம்பியின் வாழ்விற்காக‌ த‌ன‌து த‌லையை அடைமான‌ம் வைத்தான் அவ‌ன் . பெற்றோருக்கு தெரிய‌ப்ப‌டுத்தாம‌லே இவ் முடிவை மேற்கொள்ளலானான் . த‌ன் த‌ம்பியை விடுவித்தவன், ப‌த்திர‌மாக‌ அவ‌னை யாழ் ந‌க‌ரிற்கும் அனுப்பி வைத்தான். உருக்குலைந்து நின்ற‌ பெற்றோருக்கு த‌ன் பார்வையாலே ஆறுத‌ல் மொழி கூறினான் குமரன்.



ஆனால் அங்கே அவ் வியக்கத்திலோ அவனது திறமைக்கே முன்னிரிமை வழங்கப்பட்டது. அவர்களது அலுவலகத்தில் அவனை ஒரு உத்தியோகத்தனாக்கினார்கள். அவர்களுடைய கணக்கு வழக்கு சம்மந்தமான சகல பொறுப்புகளும் அவனிடமே ஒப்படைக்கப் பட்டது. அவர்களது அரசியல் அலுவலகத்தில் அவன் ஒரு கணக்காளன் ஆனான்.



இந் நிகழ்ச்சிகளை தாரணி கேள்வியுற்ற போது மிகுந்த வேதனை அடைந்தாள். குமரனின் கடிதங்களே அவளை தேற்றின. "நிலைமை சரி வரும், அப்போது எங்களுக்கும் எழுச்சி கிடைக்கும் நாங்களும் மதிக்கப் படுவோம்" என்ற அவனது வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாகவே அமைந்திருந்தன. குமரனுக்காக தினம் தினம் அவள் இறைவனை வேண்டலானாள்.


இவ்வாறு இருக்கையில் தார‌ணியின் ப‌டிப்பும் நிறைவடைந்தது. அவ‌ள் வ‌வுனியா வைத்திய‌சாலைக்கு தாதியாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டாள். இத‌ற்கிடையில் கிளிநொச்சி சென்ற‌ தார‌ணி த‌ன‌து காத‌லை பெற்றோரிட‌ம் தெரிய‌ப்ப‌டுத்தினாள். இக் காத‌ல் ப‌ற்றி ஏற்க‌ன‌வே அறிந்திருந்த‌ அவ‌ள‌து த‌ந்தை கும‌ர‌னின் குடும்ப‌ம் ப‌ற்றியும் ந‌ன்கு அறிந்திருந்தார். சொல்ல‌ப் போனால் அவ‌ர் அக் குடும்ப‌த்தின் மேல் மிகுந்த‌ ம‌திப்பும் ம‌ரியாதையும் வைத்திருந்தார் என்றே கூற‌லாம். ஆனால் கும‌ர‌னின் த‌ற்போதைய‌ நிலை அவ‌ரை ஆட்ட‌ம் காண‌ வைத்த‌து. ஆனால் தார‌ணியின் க‌ண்ணீருக்கு முன் அவ‌ரால் ம‌றுப்பு கூற‌ முடிய‌வில்லை. ம‌ன‌மின்றி சம்மதம் அளித்தார். த‌க‌வ‌ல் கும‌ர‌னின் வீட்டிற்கும் தெரிய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. கும‌ர‌னின் குடும்ப‌த்தின‌ர் தார‌ணியை த‌லை மேல் வைத்து கொண்டாட‌லாயின‌ர். இத‌னால் பெரிதும் ம‌ன‌ம் ம‌கிழ்ந்த‌ கும‌ர‌னும் முட்க‌ளிலும் ம‌ல‌ரும் றோஜாவைப் போல் சிரிப்புட‌ன் த‌லைய‌சைத்து த‌ன் சிநேக‌ம் சொல்லி வ‌ழி அனுப்பி வைத்தான் தார‌ணியை வ‌வுனியா வைத்திய‌சாலைக்கு.


வ‌வுனியா சென்ற‌டைந்த‌ தார‌ணியும் தன்னுடன் பயின்ற நண்பி ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்து விடவே அங்கிருந்த படியே தனது பணிக்கு சென்று வரலானாள். ந‌ண்பியின் குடும்ப‌மோ தார‌ணியின் மேல் மிகுந்த‌ அக்க‌றை பாராட்டிய‌து. நாட்க‌ள் ந‌க‌ர்ந்து கொண்டேதானிருந்த‌ன‌. அடிக்க‌டி வ‌ரும் கும‌ர‌னின் குல‌ம் விசாரிப்புக்க‌ள் அவ‌ளை வாழ‌ வைத்துக் கொண்டிருந்த‌து.



தொட‌ரும்...

ஞாயிறு, மார்ச் 08, 2009

சின்னப் பூவே மெல்லப் பேசு...(பாக‌ம் 01)


நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்திருந்து கண்களில் நீர் வழிய முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி. அவளுடைய நினைப்பெல்லாம் குமரன், குமரன்,குமரன் என்ற ஒருவனை பற்றியதாகவே அமைந்திருந்தது.

குமரன் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்டவன், நல்லதொரு தாய் தகப்பனிற்கு இவன் தான் தலைப்பிள்ளை. இவனுக்கு பின்னர் இரு தம்பியும் கடைக்குட்டி பிரியாவுமே இவனது குடும்ப சொத்தாக இருந்தது. தகப்பனார் தணிகாசலம் தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து அதன் மூலம் ஈட்டிய வருவாயில் தனது பிள்ளைகளை குறையற படிப்பித்து வந்தார். என்ன தான் வறுமை அவர்களை அடிக்கடி சிறைப் பிடித்தாலும் அவர்கள் நால்வரும் தமது பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் படிப்பில் படு சுட்டிகளாகவே விளங்கினர். அதிலும் குமரன் அதி புத்திசாலி என்றே கூறலாம். எதனையும் சட்டென புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி அவனுக்கு வாய்த்திருந்தது. இப்பொழுது அவன் உயர்தர வகுப்பில் முதலமாண்டு மாணவன். வகுப்பில் தன் தந்தைக்கு உதவும் நேரம் போக மிகுதி நேரமெல்லாம் அவனது கவனம் படிப்பொண்றாக மட்டுமே இருந்தது.

ஆனால் இப்பொழுதெல்லாம் சில நாட்களகவே அவனது இதய வானில் பல பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தவள் தார‌ணி.

தாரணி... அமைதியே உருவாண அழகிய அவளது முகம், அடர்ந்த நீண்ட கூந்தல், மெல்லிய தேகம், குழந்தைகளின் சிரிப்பில் தன்னை தொலைக்கும் அவளது குணம், அப்பப்பா...குமரனின் மனத்திரையில் தான் அவளது நிஜப்படம் எத்தனை எத்தனை விதமாய் வார்த்தைகளற்று...


தாரணி, குமரன் படிக்கும் அதே பாடசாலையில் தான் கா.பொ.த (சாதாரண தரம்) கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவள், அவளும் கிளிநொச்சியையே பிறப்பிடமாக கொண்டிருந்தாள். அவளது தகப்பனார் ஆறுமுகவாணன் அவ்வூரிலே சிறிய பலசரக்கு கடை ஒன்று வைத்து வியாபாரம் நடத்தி வந்தார். தாரணியையும் அவனது அண்ணன் சிவசங்கரனையும் கொண்டதாக பொற்றோருடன் சேர்ந்து அச் சிறியதொரு குடும்பமே அவளது உலகமாக இருந்தது. தாரணி ஆரம்பத்தில் வேறு ஒரு பாடசாலையில் தரம் 10 வரை பயின்று விட்டு O/L பரீட்சைக்காக இப் புதிய பாடசாலைக்கு அறிமுகமாகியிருந்தாள். தாரணியின் அண்ணன் சிவசங்கரன் வேலை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தான். தாரணியின் தாயார் ஒரு ஆஸ்துமா நோயாளி, அவரை கவனிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாரணியினுடையதாகவே இருந்தது. தனது தகப்பனாரின் கடையில் வேலை தாயின் சேவை இதற்கிடையில் படிப்பு என்று தாரணியின் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டிருந்தது.


தனது தாயார் ஆஸ்துமா நோயால் வேதனைப்படுவதை கண்டு மனம் பொறுக்காதவள் தான் படித்து ஒரு வைத்தியராகி த‌ன‌து தாயின் நோயை குண‌மாக்குவேன் என்று அடிக்க‌டி த‌ன் த‌ந்தையிட‌ம் கூறி வ‌ந்தாள். அதிகாலை 5 ம‌ணிக்கெல்லாம் எழுந்து விடும் ப‌ழ‌க்க‌ம் உள்ள‌ தார‌ணி த‌ன‌து பாட‌சாலைக்கு சைக்கிளிலே சென்று வ‌ந்து கொண்டிருந்தாள். அவ‌ள‌து வீட்டிலிருந்து அவ‌ள் புதிதாய் க‌ல்வி ப‌யிலும் பாட‌சாலை சிறிது தொலைவிலேயே அமைந்திருந்த‌தும் அதற்கு ஒரு கார‌ண‌மாக‌ இருந்தது.

அன்றும் அப்ப‌டித்தான் மாத‌த்தின் முத‌ல் புத‌ன்கிழ‌மை குளித்து நீராடி விட்டு த‌ன் தாயிற்கு செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் அத்த‌னையையும் முடித்து விட்டு அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ பாட‌சாலைக்கு புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தாள். பாடசாலை தொட‌ங்கும் நேர‌மோ 7.30 இத‌ற்கு சிறிது தாம‌த‌மானாலும் அங்கு த‌ர‌ப்ப‌டும் த‌ண்ட‌னை அவ‌ள‌து ம‌ன‌தில் ப‌ட‌ம் விரித்தாடிய‌து. அந்த‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ சைக்கிளை மிதித்த‌வ‌ள் எதிரில் வ‌ந்த‌ வ‌ய‌தான‌ ஒருவ‌ருட‌ன் மோதிவிட்டாள். அவர் வேறு யாருமே இல்லை அவ‌ர் தான் தார‌ணியின் வ‌ருங்கால‌ மாம‌னார் என்ப‌தை அவ‌ள் அன்று ச‌ற்றும் அறிந்திருக்க‌ வாய்ப்பில்லை தான்.

அவ‌ருட‌ன் மோதுண்ட‌ அதிர்ச்சியில் த‌ட்டு த‌டுமாறி எழுந்த‌வ‌ள் தான் ஒரு வ‌ய‌தான‌வ‌ருட‌ன் மோதிவிட்டோம் என்ப‌தை அறிந்து அழ‌ ஆர‌ப்பிக்க‌லானாள்.ஆனால் அவ‌ள‌து அதிஷ்ட‌ம் அப் பெரிய‌வ‌ருக்கு எதுவித‌மான‌ சிறு காய‌ங்க‌ள் கூட‌ ஏற்ப‌ட்டிருக்க‌வில்லை. அத‌னை அப் பெரிய‌வ‌ர் அவ‌ளுக்கு ப‌ல‌ முறை எடுத்துக் கூறியும் அவ‌ள‌து அழுகை நின்றபாடாக‌வில்லை. அவ‌ள் அப் பெரிய‌வ‌ரிட‌ம் த‌ன் செய‌லுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு விசும்பிக் கொண்டிருந்தாள். அவ‌ளை ச‌மாதான‌ப் ப‌டுத்தி தோற்ற‌வ‌ரின் முகத்தில் அவளது பள்ளிச் சீருடைகள் மின்னலடித்தன. ஆம் அவரது மகன் குமரன் படிக்கும் அதே பாடசாலைக்குரிய சீருடைகள்.அவர் தனது முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டவர், தார‌ணியை நோக்கி "அழாத‌ குழ‌ந்த‌, உந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தில‌ தான் என்ட‌ ம‌க‌னும் ப‌டிக்கிறான் பேர் கும‌ர‌ன், அவ‌ன்ட‌ அப்ப‌ன் தான் நான். என‌க்கு ஒன்டுமில்லய‌ம்மா உன‌க்கு school தொட‌ங்க‌ போகுது, நீ போம்மா நாளைக்கு நான் என்ட‌ ம‌க‌ன‌ட்ட‌ சொல்லி அனுப்புற‌ன் என்று அவ‌ளை தேற்றி விட்டு புற‌ப்ப‌ட‌லானார் கும‌ர‌னின் த‌ந்தை.


ஆனால் அவ் வார்த்தைக‌ளை கேட்ட‌ தார‌ணியோ விக்கித்து நின்றாள். அவ‌ள‌து காதுக‌ளில் வ‌ந்து நின்ற‌ கும‌ர‌ன் என்ற‌ பெய‌ர் மேலும் அவ‌ளை ப‌ய‌முறுத்துவ‌தாக‌வே அம‌ந்திருந்த‌து. ஏனெனில், கும‌ர‌ன் அவ‌ள‌து பாட‌சாலையில் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன். கார‌ண‌ம் அவ‌ன் தான் அப் பாட‌சாலையின் மாண‌வ‌த் த‌லைவ‌ன். ப‌டிப்பிலும் ச‌ரி விளையாட்டிலும் ச‌ரி அவ‌னை மிஞ்ச‌ ஆளே இல்லை என்று அடிக்க‌டி அவ‌ள‌து வ‌குப்புத்தோழிக‌ளின் வாயால் கும‌ர‌ன் புராண‌ம் பாட‌க் கேட்டுள்ளாள். ஆக‌வே வ‌ர‌ப்போகும் நாளை எப்ப‌டி இருக்குமோ என்ற க‌ல‌க்க‌ம் அவ‌ளை வெகுவாக‌ வாட்டிய‌து. தாம‌த‌மான‌ இன்றைய‌ நாளால் பாட‌ச்சாலைக்கு செல்ல‌முடியாம‌ல் போன‌தால் வீடு திரும்பியதால் த‌ன் த‌ந்தையிட‌ம் ந‌ன்றாக‌ வாங்கிக் க‌ட்டிக் கொண்டு த‌ன‌க்கு விருப்ப‌மான‌ த‌மிழ் பாட‌த்தை எடுத்து ப‌டிக்க‌லானாள்.


ஆனால் எங்கே ப‌டிப்பு வ‌ந்த‌து, கும‌ர‌ன் தான் வ‌ந்தான். ஏன் என் அப்பாவை விழுத்தாட்டினாய் என்று அத‌ட்ட‌வும் செய்தான். அதே ப‌ய‌த்துட‌னே உற‌ங்கியும் போனாள் தார‌ணி.


‌றுநாள் பொழுதும் புல‌ர்ந்த‌து, ஆனால் நேற்றைய‌ க‌வ‌லை ம‌ற‌ந்திருக்க‌வில்லை. நேற்ற‌ய‌ நாளின் தாம‌த‌த்தினால் ஏற்ப‌ட்ட‌ விப‌த்து ஞாபகத்திற்கு வ‌ர‌வும் இன்றைய‌ தின‌ம் த‌ன‌து வேலைக‌ளை வெகு சீக்கிர‌மாக‌வே முடித்துக் கொண்டு புற‌ப்ப‌ட‌லானாள் தாரணி.

ஆனால் அன்றைய தினம் பாட‌சாலையில் கும‌ர‌னை எங்கு தேடியும் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌வில்லை அவ‌ளால். நேற்று நினைவ‌லைக‌ளில் அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ வ‌ந்து ப‌ய‌முறுத்திய‌வ‌னை இன்று காண‌வில்லை. அவ‌னைக் காண‌வில்லை என்ற‌தும் தார‌ணியின் ப‌ய‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. பாட‌சாலை தொட‌ங்கி இடைவேளை ம‌ணியும் அடித்த‌து, த‌ன‌க்குரிய‌ உண‌வை எடுத்துக் கொண்டு த‌ன‌து தோழிக‌ளுட‌ன் சேர்ந்து நேற்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தை அர‌ட்டை அடித்த‌வாறே உண்ண த‌யாரானாள். அப்போது ஒரு குர‌ல், க‌ம்பீர‌மான‌ ஒரு குர‌ல் Excuse Me! இங்க‌ தார‌ணி...?
அக் குரல் கேட்டதுதான் தாமதம் அக் குரல் வந்த திசையை நேக்கு மின்னலென திரும்பினாள் தாரணி. ஆனால் அங்கே முகத்தில் புன் சிரிப்புக்களுடன் இரு கைகளையும் குறுக்கே கட்டியபடி அவளை நேக்கி நின்றான் குமரன்.
தொடரும்...

வெள்ளி, பிப்ரவரி 27, 2009

இனியும் வேண்டாமே! (கண்ணீர் துளிகளுடன்)




நேற்று முத்துகுமார்
இன்று அமரேசன்
நாளை ??????


இனியும் வேண்டாமே
இன்னொரு தீக்குளிப்பு
இதயம் தாங்கவில்லை
இடிந்த உம் வாழ்வு கேட்டு

துஷ்டர் நிறை இவ்வுலகில்
துன்பமான செய்தி கேட்டு
துறக்க நினைக்கும் உம் உயிரை
தூசாக தான் நினைத்தனரே

கஷ்டப்பட்டு கதறி அழும்
உம் குடும்பம் காண்பீரோ
கருனைப் பட்டு எங்கள் மேல்
உயிர் துறக்க துணிந்தீரோ

இஷ்டப்பட்டு உம் சாவை
ஏற்கவில்லை எம் மனங்கள்
நஷ்டப்பட்டு நிற்பதெனவோ
எம் தமிழ் இனம் தான் பாரீரோ

போர்களமாம் ரணகளத்தில்
பொஸ்பரஸ் குண்டு எமை அழிக்க‌
போதும் இவ் யுத்தம் என்று
உம் சாவை நீர் அணைக்க‌


கண்ணீர் தான் மிஞ்சிடுமோ
கவலை தான் எஞ்சிடுமோ
வேண்டாமே இனி எமக்கு
இரு புறமும் உயிரிழப்பு!

புதன், பிப்ரவரி 25, 2009

எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!


ஒஸ்காரின் நாயகனே
சாதனையின் காவியனே
உலகமெங்கும் உன் பெயர்
உவகையுடன் உதிர்த்து விட‌
களிப்புடனே நாம் கூறுகிறோம்
Congratulation!



இசையாய் வாழ்பவனே
இமையமாய் உயர்பவனே

விண்ணெல்லாம் உன் புகழ்
விடிவெள்ளியாய் ஒளி பரப்ப‌
பெருமையுடன் நாம் கூறிடுவோம்
Best Wishes!




தென் இந்தியாவில் மலர்ந்தவனே
தேனமுதாய் பொழிபவனே
இதயமெங்கும் உன் இசை
இன்பமாய் இடி முழங்க
கீதமுடன் நாம் கூறிடலாம்
Greetings For You!




உன் அன்னை உளம் மகிழ‌
உறவெல்லாம் உடன் சிறக்க‌
நெஞ்சமெல்லாம் உன் உருவம்
நெடிது காலம் நிலை பெறவே
கொண்டாடி மகிழ்ந்து நாம் கூறுகின்றோம்
God Bless You!


வெள்ளி, பிப்ரவரி 20, 2009

எனக்கான நீ...


எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்
பத்திரமாய்
என் நினைவலைகளில் தினம் தினம் என்னுடனே...


என் சின்ன சின்ன சந்தோஷங்களின் பொழுதும்,
என் பெரிய சோகங்களின் பொழுதும்,
என் செல்லக் குறும்புகளின் பொழுதும்,
எனக்கான நீ இன்னமும் என் மனக்கூட்டிற்குள்

பத்திரமாய்


அதிகாலை வேளைகளில் நான் உன் பெயரை
உச்சரிக்கும் பொழுதும்
அந்தி மாலை நேர‌ங்க‌ளில் என் உறக்கக்
கனவுகளின் போதும்
என‌க்கான‌ நீ இன்னமும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்


என் வாழ்க்கையின் ஒவ்வொரு த‌ருண‌ங்க‌ளின்
பொழுதும்
என் வீட்டிற்குள் நான் வாச‌ம் செய்யும் என்
அலுவல்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்
‌த்திர‌மாய்

நொடுஞ்சாலை வீதிக‌ளில் நான் ந‌ட‌ந்து செல்லும்
பொழுதும்
நீண்ட‌ தூர‌ என் பிரயாணங்களின் போதும்
என‌க்கான‌ நீ இன்ன‌மும் என் ம‌ன‌க்கூட்டிற்குள்

பத்திர‌மாய்

என் ஒவ்வொரு நொடிப்பொழுது த‌னினும்
எனக்கான நீ என்னுடனே என் நினைவலைகளில்...
என்றென்றும் என் மனக்கூட்டிற்க்குள் இன்னமும்
பத்திரமாய்
உன‌க்கான‌ நான் உன் இத‌ய‌ வாச‌ல் த‌னிலும்
இல்லாத‌ போதும்...

புதன், பிப்ரவரி 18, 2009

ச்ச்சீசீதனம்...


பொன் வேண்டும்,
பொருள் வேண்டும் என்பர்,
பெண் பாவை தாம் எமை வரன் கேட்பார்...

சீர் வேண்டும்,
சொத்து வேண்டும் என்பர்,
சிறப்புடனே நாம் வாழ்ந்திடவே என்பர்...

கார் வேண்டும்,
கனக்க வேண்டும் என்பர்,
கண்மணியே உனை கருத்தோடு காத்திடுவேன்
என்பர்...

ஆனாலும் எம்ம‌வ‌ரே...

பொன் வேண்டாம்
பொருள் வேண்டாம்

சீர் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்

கார் வேண்டாம்
கன‌க்க‌வும் வேண்டாம்

உம‌த‌ன்பு ஒன்றே போதுமே எமக்கு,
உயிரென‌ நாம் உம‌க்காய் வாழ்ந்திட‌வே...

புதன், பிப்ரவரி 11, 2009

என்ன‌ நான் சொல்லுற‌து...?


ஒண்டும் விளங்குதில்ல...?
எங்கட பாழாய் போன லங்கா தேசத்தில;
என்ன நான் சொல்லுறது;
எல்லாம் எங்கட "வற்"றிட வளர்ச்சி பற்றித்
தானுங்கோ...

ஒருக்கா கூடுமென்பர்,
ஒருக்கா குறையுமென்பர்,
ஆனா ஒண்டையுமே காணம்...?
எங்கட பொருட்கள்ட விலையேற்றம் தவிர,


முதல்ல 15% ம்,,,
பிற‌கு 13% ம்,,,
இப்ப 12% ம்,,,
ஆனா என்னண்ட‌ என‌க்குப் பார்த்தா,
இப்ப‌ ஏதோ 16% மாதிரிக் கிட‌க்கு
அப்ப‌டி இருக்கு சந்தைல‌ சாமான்ட‌
விலையெல்லாம்.

கேட்டா ஏதோ Nation Building Tax ஆம்...?
ஓமோம் ஓமோம் ந‌ல்ல‌ ப‌க‌டிதான் பாருங்க‌;
இங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation People Distroyed
அங்கால‌ ஒரு ப‌க்க‌ம் Nation Build Up ந‌ட‌க்குது
போல‌,

யாருக்கு தான் விள‌ங்குமோ;
எங்க‌ட‌ பெரிய‌ ம‌னுச‌ன் ம‌ஹிந்த‌வின்
சிந்த‌னைக‌ள்...?